ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
நடிகர் ரஜினிகாந்த்தின் அண்ணன் சத்ய நாராயண ராவ்வின் மனைவி கலாவதிபாய்(வயது 70) உடல்நலக்குறைவால் பெங்களூருவில் காலமானார்.
நடிகர் ரஜினி சிறுவயதாக இருக்கும்போதே அவரது பெற்றோர்கள் இறந்துவிட்டனர். இதனால் ரஜினிக்கு தந்தையை போன்றும், தாயை போன்றும் உறுதுணையாக இருந்தவர்கள் அவரின் அண்ணன் சத்ய நாராயண ராவ் மற்றும் அவரது மனைவி கலாவதிபாய். ரஜினியின் வளர்ச்சியில் இவர்களின் பங்கு முக்கியமானது. ரஜினி அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு தாய் போன்றவர் கலாவதி பாய் எனது தனது அண்ணியை குறிப்பிட்டிருக்கிறார்.
பெங்களூருவில் வசித்து வந்த கலாவதிபாய், சிறுநீரக் கோளாறு மற்றும் சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்தார். அங்குள்ள அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவருக்கு, நேற்று இரவு மாரடைப்பு ஏற்பட சிகிச்சை பலன் இன்றி காலமானார்.
அண்ணி இறந்த தகவல் அறிந்த ரஜினி, இன்று காலை பெங்களூரு புறப்பட்டு சென்றார். கலாவதிபாய் உடல், அஞ்சலிக்காக குரு கிருபா இல்லத்தில் வைக்கப்பட்டது.
நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவி, மகள்களுடன் சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவரது உடலுக்கு இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டன.
சத்ய நாராயணன் - கலாவதி பாய் தம்பதியருக்கு ராமகிருஷ்ணன், மகாதேவ், பாண்டுரங்கன் என மூன்று மகன்களும், ராதாபாய் என்ற மகளும் உள்ளனர்.